தமிழக மீனவர்களுக்கு 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..! - Seithipunal
Seithipunal


நாகபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பத்து மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. மேலும், அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 

இதைத் தொடர்ந்து, அவர்கள் இலங்கையின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு, தமிழக மீனவர்களை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

court custody to tn fishermans till 23


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->