டி.எஸ்.பி. கண்ணன் மீது பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
court order DSP
திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணன், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் டி.எஸ்.பி. பதவியில் பணிபுரிந்து வருகிறார்.
2015 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கின் விசாரணை தற்போது ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் பலமுறை அறிவுறுத்தினார்.
இருந்தாலும், அவர் தொடர்ந்து நீதிமன்ற அழைப்புகளை புறக்கணித்து ஆஜராகாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கூட டி.எஸ்.பி. கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் மாஜிஸ்திரேட், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.