டி.எஸ்.பி. கண்ணன் மீது பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணன், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் டி.எஸ்.பி. பதவியில் பணிபுரிந்து வருகிறார்.

2015 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கின் விசாரணை தற்போது ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் பலமுறை அறிவுறுத்தினார்.

இருந்தாலும், அவர் தொடர்ந்து நீதிமன்ற அழைப்புகளை புறக்கணித்து ஆஜராகாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கூட டி.எஸ்.பி. கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் மாஜிஸ்திரேட், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

court order DSP


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->