கடலூரில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


மறு அறிவிப்பு வரும் வரை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை இவ்வாறு அறிவித்துள்ளது.

அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழக வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும் கடலில் 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழங்குடா, தேவனாம்பட்டினம், சொத்திகுப்பம் உள்ளிட்ட 49 மீனவ கிராமத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென கடலூர் மாவட்ட மீன்வளதுறை அதிகாரிகள் மீனவ கிராமங்களில் அறிவித்துள்ளனர்.

கடலூரில் கடல் சற்று சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடலூர் துறைமுகம் மற்றும் கடலோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Fisher man Alert


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->