தமிழக பெற்றோர்களே உஷார்! நீர்நிலையில் முழ்கி 5 குழந்தைகள் பலி!
Cuddalore Kallakurichi 5 Childs death in
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில், இன்று மாலை மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லால்பேட்டை பகுதியில் உள்ள வெள்ளியங்கால் ஓடைக்கு, ஐந்து சிறுவர்கள் குளிக்க சென்றனர். அப்போது, ஓடையின் பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக மூன்று சிறுவர்கள் தவறி விழுந்தனர்.
அவர்களை காப்பாற்ற மற்றவர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. உடனடியாக உதவிக்காக அருகிலுள்ளவர்களை அழைத்தனர். ஆனால் மீட்பு முயற்சி பலனளிக்கவில்லை.
பின்னர், தகவல் வழங்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு மூன்று சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர்.
உயிரிழந்த சிறுவர்கள் வடக்கு கொளக்குடியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விபரம்:
உபயத்துல்லா (8), நான்காம் வகுப்பு, ஜெ.ஹெச். நர்சரி & பிரைமரி பள்ளி.
முகமது அபில் (10), ஐந்தாம் வகுப்பு, அதே பள்ளி.
ஷேக் அப்துல் ரஹ்மான் (13), எட்டாம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசார் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் ஸ்வேதா (12), சிவக்குமார் மகள் சிவசக்தி (11) ஏரிக்கு குளிக்கச் சென்ற போது தண்ணீர் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
English Summary
Cuddalore Kallakurichi 5 Childs death in