இனிதே தொடங்குகிறது பால் பொருட்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில்..!
Dairy products in plastic bottles are starting soon
உணவு பாதுகாப்பு விதிகள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அனுமதிக்கின்றன என்று உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில், சென்னை ஐகோர்ட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், உணவு பாதுகாப்பு விதி ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பனை செய்ய அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்த நிலையில், பாட்டில் பயன்பாட்டை தவிர்க்க ரயில், பேருந்து நிலையம், சுற்றுலா தலங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Dairy products in plastic bottles are starting soon