தர்மபுரியை பதறவைத்த சம்பவம்! பூட்டிய வீட்டில் சடலமாக மீட்பட்ட தாய் இரு மகன்கள்! ஆபத்தான நிலையில் கணவன்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் அருகே பூட்டிய வீட்டில் தாய், இரண்டு மகன்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையின் உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் அடுத்த மணிக்கட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன். இவரின் மனைவி நந்தினி. இவர்களுக்கு தர்ஷன், அபினேஷ் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், இரண்டு நாட்களாகவே இவர்களின் வீட்டில் வீடு பூட்டியே இருந்துள்ளது. மேலும் துர்நாற்றம் வீசியதன் காரணமாக இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டில் பூட்டை உடைத்து பார்த்தபோது, நந்தினி மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக இருந்துள்ளனர்.

மேலும் சிவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, போலீசார் விரைவாக வந்து சிவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிவித்தனர். 

மேலும் நந்தினி மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்களை விட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை கடன் பிரச்சனையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்ய முயற்சித்தாரா என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Kariyamangalam Mother and 2 child mystery death case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->