3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. திமுக பொறுப்பாளர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கல்விநிலையங்கள், அக்கம்பக்கதினர் என எல்லா இடங்களிலும் வயது வித்யாசமின்றி குழந்தைகள் மீதான வக்கிரங்கள் அரங்கேறி வருகின்றன. 3 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சின்னகரை பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் கட்டிட மேஸ்திரி மான சிவக்குமார் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று 3 வயது குழந்தை என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வீட்டிற்கு சென்ற சிறுமி கண்ணீருடன் தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திமுக பிரமுகர் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMk cadre arrested Due to raping 3 years old Girl


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->