ஒருபக்கம் கொண்டாட்டம் ... மறுபக்கம் சோகம்! திமுக மூத்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
DMK Minister Duraimurugan Admitted in Hospital Vikravandi Election
அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதுவரை 16 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது.
இதில், திமுக வேட்பாளர் சிவா 1,00,177 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மேலும் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 45,768 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 8,226 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுகவின் வெற்றிமுகத்தை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயம் வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார். பின்னர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில், அமைச்சருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
DMK Minister Duraimurugan Admitted in Hospital Vikravandi Election