சிக்கிய திமுக அமைச்சர்கள் வரிசையில் அடுத்த விக்கெட்!
DMK Minister I Periyasamy case Chennai HC
அமைச்சர் ஐ. பெரியசாமி மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், திண்டுக்கல் நீதிமன்றம் வழங்கிய விடுவிப்பு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனுடன், வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி வேல்முருகன் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு விவரம்:
2006 முதல் 2010 வரை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு மீறிச் சொத்துகள் குவித்ததாக ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் குற்றமற்றவர்களாக விடுவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விடுவிப்பு தீர்ப்பை செல்லாது என்று அறிவித்து, மீண்டும் விரைந்து விசாரணை நடத்தும் வகையில் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக விமர்சனம்:
இதற்கு முன், துரைமுருகன், எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில திமுக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்கிலும் உயர்நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதனை குறிப்பிட்டு அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நீதியின் பிடியில் சிக்கும் திமுக அமைச்சர்கள் வரிசையில் அடுத்த விக்கெட்- ஐ. பெரியசாமி! #ByeByeStalin" என்று குறிப்பிட்டுள்ளது.
English Summary
DMK Minister I Periyasamy case Chennai HC