அக்கறை இருந்தால்... ''ஜானகி பாணி''யில் - சசிகலாவுக்கு செக் வைத்த EPS.!
Edappadi Palaniswami question sasikala
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசி இருப்பதாவது,
கட்சியில் உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அ.தி.மு.கவை ஒருங்கிணைக்க முடியும். சசிகலா கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் இல்லை என அறிவித்துள்ளார்.
கட்சி மீது உண்மையில் சசிகலாவிற்கு அக்கறை இருந்தால் ஜானகி பாணியில் ஒரு அறிக்கையை தற்போது வெளியிட வேண்டும். எங்கள் தலைமையில் அ.தி.மு.க இருப்பதை ஏற்று சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/AMMK Sasikala a.PNG)
ஓ. பன்னீர் செல்வத்தை அ.தி.மு.கவில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் கிடையாது. தமிழகத்தில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கள்ளச்சாராய சம்பவங்களை திட்டமிட்டு தி.மு.க அரசு மறைந்துள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கள்ளச்சாராயம் பெருகிக்கொண்டே வருகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami question sasikala