இரு யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு யானை உயிரிழப்பு...! வனத்துறையினர் கூறுவது என்ன? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாமரத்துப்பள்ளம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு  தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் பெயரில், நேற்று காலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்த நிலையில் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

யானையின் தலைப்  பகுதியில் காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அந்த சோதனையில் 2 யானைகளுக்கிடையே பயங்கர சண்டை நடந்ததும், அதில் இந்த யானையை மற்றொரு யானை தந்தத்தால் சரமாரியாக குத்தியதில் இறந்ததும் தெரிய வந்தது. அதில் பிரேத பரிசோதனையை தொடர்ந்து இறந்த யானையின் உடலிலிருந்த 2 தந்தங்களும் காவலர்களால் கைப்பற்றப்பட்டன.

வனத்துறை அலுவலர்கள்:

இது குறித்து வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது, 'ஆண் யானை இறந்த தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினோம். தலையில் இருக்கும் காயங்களை வைத்து அந்த யானை அருகிலுள்ள மலைப்பகுதியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகித்தோம்.

உடற்கூராய்வு அறிக்கையில் இறந்து போன யானைக்கும், மற்றொரு யானைக்கும் சண்டை நடந்ததும், அதில் அந்த யானை தந்தத்தால் குத்தியதில் இந்த ஆண் யானை இறந்ததும் தெரிய வந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

elephant died clash between two elephants forest officials


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->