டாஸ்மாக் கடையில் திருட்டு - போலீசாரின் வலையில் சிக்கிய மர்ம கும்பல்.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் இயங்கி வந்த மதுபானக் கடையில் கடந்த 1-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று தேன்கனிக்கோட்டை -பஞ்சப்பள்ளி சாலையில் பேட்டராய சுவசாமி கோயில் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் போலீஸாரை கண்டதும் வேகமாக திரும்பி சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காரை துரத்தி சென்று காரை மடக்கி பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் கடந்த 1-ம் தேதி திப்பசந்திரத்தில் உள்ள மதுக்கடையிலும் மற்றும் கடந்தாண்டு 14.09.24 அன்று இருதுகோட்டையில் உள்ள மதுபானக்கடையில் மதுபான கடைகளின் சுவற்றை துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்று குடியாத்தம் பகுதியில் வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples arrested for steal in tasmac shop


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->