குடி போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.!! - Seithipunal
Seithipunal


குடி போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.!!

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி மதுபோதையில் தனது பதின்மூன்று வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் மது போதையில் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது அவர், சிறுமியின் தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five years jail penalty to father for sexuall harassment case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->