ரகசிய தகவல்! மடக்கி பிடித்த போலீஸ்! சிக்கிய 117கிலோ கஞ்சா! அதிர்ச்சிவூட்டும் பின்னணி!
Ganja worth Rs10 lakh seized while trying to smuggle it to Sri Lanka
இலங்கைக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அதிராம்பட்டினம் மற்றும் வண்டிப்பேட்டையில் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் பண்டல் பண்டலாக கஞ்சா பொட்டலங்களை இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து காரில் இருந்த 117 கிலோ கஞ்சா பொட்டலங்களை காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் வந்த இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் ராஜபாண்டியன் அவரது நண்பர் தவமணி என்பது தெரியவந்துள்ளது. இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கஞ்சா கடத்த முயன்ற இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.10லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Ganja worth Rs10 lakh seized while trying to smuggle it to Sri Lanka