அய்யய்யோ!!! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த கேஸ் சிலிண்டர் விலை...!!! மத்திய அரசு அறிவிப்பால் மக்கள்...?
Gas cylinder prices came effect from midnight announcement central government
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகள் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதியன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.
அவ்வகையில், ரூ.918.50-யில் இருந்து குறைந்து ரூ.818.50 ஆக விற்கப்பட்டது.இதில் 19.2 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலையில் கடந்த சில மாதங்களாகவே மாற்றம் இருந்து வந்தது.கடந்த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது.
அதே சமயம் கடந்த 1 வருடமாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தாத நிலையில், மத்திய அரசு நேற்று திடீரென ரூ.50 உயர்த்தியது.
இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Gas cylinder prices came effect from midnight announcement central government