பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் - ஆளுநர் ரவி குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும். 

பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை தவிர்த்து தேடுதல் குழுவை நியமித்து உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஆளுநர் தரப்பிலான பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதியை உள்ளடக்கி குழு அமைக்க வேண்டும். 

மதுரை காமராஜன் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்ய புதிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும். யுஜிசி பிரதிநிதியை சேர்க்காமல் இருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

governor rn ravi speech about university chancellor issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->