மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு ! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஊதியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த பள்ளியில்  54 வயதான சிவக்குமார்  என்பவர் அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஆசிரியர் சிவக்குமார் அந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து  அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் ஆசிரியர் மீது புகார் செய்தனர்.மேலும் அந்த புகாரின்  பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக்கு பின்னர் ஆசிரியர் சிவக்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் சிவக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt school teacher jailed for sexually harassing student


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->