பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - "தலைமை ஆசிரியர்" சஸ்பெண்ட் - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொடியம் பகுதியை சேர்ந்தவர் சகலகலாதரன் (59). இவர் விட்டலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சகலகலாதரன் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து மாணவி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் சகலகலாதாரணக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், திண்டிவனம் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் சகலகலாதரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Headmaster suspended for sexually harassing schoolgirl in tindivanam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->