கள்ளக்குறிச்சி விவகாரம்.. திடீரென சென்னையில் குவிக்கப்பட்ட போலீஸ்..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவி தாயார் புகார் தெரிவித்து இருந்தார். இதனால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். அதன்பிறகு மக்கள், மாணவ அமைப்பு என பல்வேறு தரப்பினர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால், போராட்டம் வன்முறையாக மாறியது. 

இதையடுத்து, கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு காரணமான 113 பேரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை, மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக தகவல் பரவியது. சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi Issue for chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->