மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம்..! - Seithipunal
Seithipunal


சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவிகளிடையே மத நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை தரம் தாழ்ந்து பேசியும் சர்ச்சையில் சிக்கிய பரம்பொருள் அறக்கட்டளை மேடைப் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம்.

பள்ளி மாணவர்களிடையே பேசிய சர்ச்சையில் சிக்கிய மாக விஷ்ணுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்பினை  தெரிவித்திருந்தனர்.

மகா விஷ்ணுவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக எதிர்ப்புகள் கிளம்பியது. அவர் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று தலைமறைவாக உள்ளார் என கூறப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மகாவிஷ்ணு , "நான் எதற்காக ஓடி ஒளிய வேண்டும், ஓடி ஒளியக்கூடிய வகையில் நான் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன்" எனவும், "பள்ளியில் உரையாற்றிய பின் ஆஸ்திரேலியா வந்து விட்டேன், செப்டம்பர் 07 மதியம் 1:10 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்திறங்குவேன். சென்னை வந்ததும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் விளக்கம் அளிப்பேன்" எனவும் கூறியுள்ளார்.

மேலும், "இறைவனிடம் சரணாகதி அடைந்துவிட்டு உங்கள் அனைவரையும் வந்து சந்திக்க உள்ளேன்; தற்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே  நான் விரும்புகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahavishnu released a video and explained


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->