தூத்துக்குடியில் சோகம் : மின்சாரம் தாக்கி நடுரோட்டில் கீரை வியாபாரி பலி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் சோகம் : மின்சாரம் தாக்கி நடுரோட்டில் கீரை வியாபாரி பலி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ். கீரை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர் இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பக்கத்தில் நின்று கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஜெயகணேஷ் அண்ணா சிலையின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்தபடி நின்றுள்ளார். அந்த நேரத்தில் சாலையோரம் சென்ற மின்சார வயரில் இருந்து ஜெயகனேஷ் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் அலறியபடி தூக்கி வீசப்பட்டார். 

இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஜெயகணேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

மேலும், சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீரை வியாபாரம் செய்துகொண்ட போது முதியவர் ஒருவர் திடீரென மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died for attack electric shock in thoothukudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->