விழுப்புரம் : பெற்றத் தந்தையை சரமாரியாக குத்தி கொன்ற மகன்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே ஈயக்குனம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மகன் சுப்ரமணி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார்.

இதையறிந்த அவரது தந்தை சுப்ரமணியை கண்டித்து வந்ததனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுப்ரமணி நேற்று இரவு போதை தலைக்கு ஏறிய நிலையில் வீட்டுக்கு வந்து, தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் போதையில் படுத்து தூங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று காலையில் எழுந்த சுப்பிரமணியன் தான் வைத்திருந்த மதுவை அருந்திவிட்டு மீண்டும் தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இந்தத் தகராறு முற்றிய நிலையில், சுப்ரமணி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் பலத்தக் காயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் விரைந்து வந்து பாலசுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சுப்ரமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near vilupuram man arrested for kill father


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->