சாலையை கடக்க முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதி உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், காளிவேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து. இவர் அங்குள்ள கிரானைட் கம்பெனியில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் அவரும் இருசக்கர வாகனத்தில் வந்தவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருதமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old Man Dead in Accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->