மகன் குடும்பத்தையே கொலை செய்த தந்தை.. கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


மகன் குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தொடுபுழா, சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீத் . இவரது மகன் அப்துல் பைசல் . இவருக்கு திருமணமாகி ஷீபா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அப்துல் பைசலுக்கும், அவரது தந்தை ஹமீதுக்கும் இடையில் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில், அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடீரென அலறினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது அவர்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தனர்.

அவர்களை காப்பாற்ற வழியின்றி இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், 4 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அப்துல் பைசலின் தந்தை ஹமீது அவர்களை கொலை செய்தது தெரியவந்தது.

அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். சொத்து பிரச்சனையால் மகன் குடும்பத்தை கொலை செய்ததாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man Kills his sons family


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->