#BREAKING | அடுத்த 24 மணி நேரம், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடுமின்னலுடன் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்று, ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கனமழை பெய்யக்கூடிய இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Orange alert chennai tamilnadu rain alert


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->