அம்பேத்கரின் உருவப்படம் அவமதிப்பு - வாணியம்பாடியில் பொதுமக்கள்சளை மறியல்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஆதிதிராவிடர் பகுதியில் பெயர் பலகை ஒன்றில் அம்பேத்கர் உருவபடம் வரையப்பட்டுள்ளது.

இந்தப் படம் மற்றும் பெயர் பலகை மீது மர்மநபர்கள் மாட்டு சாணத்தை வீசி அவமதித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர். 

மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈட்டுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர்.

அவர்களிடம் சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னரே அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 

இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

peoples protest in thirupathur vaniyamabadi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->