நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு பெட்ரோல் குண்டு வீச்சு - ராணிப்பேட்டையில் பரபரப்பு.!
petrol bomb attack to police station in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் காவல் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்தபடி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து திடீரென காவல் நிலையத்தின் மீது வீசிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவல்துறை உயரதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்திருந்த இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றது தெரியவந்தது.
அதன் பின்னர் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், வியாபாரிகளை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
petrol bomb attack to police station in ranipet