பரபரப்பு - நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.!
retired sub inspector murder in tirunelveli
திருநெல்வேலி மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி காட்சி மண்டம் அருகே ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை நடத்தப்பட்டது. இந்தத் தொழுகையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் கலந்துகொண்டார்.
இவர் தொழுகை முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்தத் தகவலின் படி விரைந்து வந்த போலீசார் ஜாகீர் உசைனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்யனார். பின்னர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுள்ள நிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக இடப்பிரச்சனை தொடர்பான வழக்கு ஒன்று காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
retired sub inspector murder in tirunelveli