சிறுமிக்கு பாலியல் தொல்லை! ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எபினேசர் என்பவர் வசித்து வருகிறார். ஒவர் பள்ளித் தலைமை ஆசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எபினேசர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், எபினேசர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

பின்னர் கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்பு எபினேசரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Retired teacher arrested in Pocso act


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->