சேலத்தில் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலை! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 45), அவரது மனைவி ரேகா மற்றும் 15 வயதான மகள் ஜனனி ஆகிய மூவரும், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்ராஜ் வெள்ளித் தொழில் செய்து வந்தார். வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கியிருந்தார். ஆனால், தொழில் நலிவடைந்ததால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். 

இதனால் வங்கியிலிருந்து தொடர்ந்து தொந்தரவுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பால்ராஜ் குடும்பம் முழுவதும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்கொலை எந்தவித பிரச்சனைக்கும் தீர்வு அல்ல:

கடன் தொல்லையால் ஏற்படும் மன உளைச்சல் மிகவும் ஆபத்தானது. கடன் பிரச்சனைகளை தீர்க்க உதவும் நிபுணர்களை அணுகுவது நல்லது.
தற்கொலை எண்ணங்கள் வந்தால் உதவி கேட்க:

தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Family suicide case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->