கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; நெல்லையில் பேராசிரியர் கைது!
Sexual harassment of college student Professor arrested in Tirunelveli
கல்லூரி மாணவியை கைப்பந்து போட்டிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை நெல்லையில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆனந்த் ரவிபேராசிரியராக பணியாற்றி வருகிறார். 40 வயதான இவர் வீரவநல்லூரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த பேராசிரியர் ஆனந்த் ரவி சம்பவத்தன்று நாகர்கோவிலில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று கூறி மாணவியை அழைத்து சென்றதாகவும் .அப்போது அங்குள்ள அறையில் தங்க வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன்,யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் வீட்டுக்கு வந்த மாணவி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பேராசிரியர் ஆனந்த் ரவியை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவர் மற்றும் பெண் ஒருவர் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Sexual harassment of college student Professor arrested in Tirunelveli