தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் காந்திமாநகரை சேர்ந்தவர் அர்ஜுன்(28). இவர் கீரநத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பால் உயிரிழந்து உள்ளார். 

இதனால் அர்ஜுன் மனவேதனையில் இருந்து வந்த நிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அர்ஜுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son commits suicide due to father death in kovai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->