கோடியக்கரையில் மர்ம முறையில் நின்ற இலங்கை படகு.!! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கோடியக்கரையில் மர்ம முறையில் நின்ற இலங்கை படகு.!! தீவிர விசாரணையில் போலீசார்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த படகை பார்வையிட்டனர். அப்போது அது இலங்கை படகு என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த படகை சோதனை செய்ததில், அந்த படகின் உள்ளே இரண்டு டீசல் கேன், தண்ணீர் பாட்டில் மற்றும் இலங்கை தின்பண்டங்கள் உள்ளிட்டவை இருந்தது. 

இதையடுத்து மர்ம ஆசாமிகள் இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. 

இவர்கள் கடத்தல் தொழிலுக்காக வந்தனரா? அல்லது இலங்கையில் ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை பைபர் படகு மர்மமான முறையில் நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sri langan boat parked kodiyakarai beach in manamelkudi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->