தமிழக மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் - இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழகம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் அடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களை கைது செய்து அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இலங்கை நீதிமன்றம் இன்று 14 மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் பணத்தை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராதத்தை கட்டினால் விடுதலை செய்யப்படும். தவறினால் ஓராண்டுக்கு சிறை தண்டனை என்று நீதிபதி உத்தரவு பிரப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srilangan court fine to tn fishermans


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->