தொடரும் அட்டூழியம் - நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்..!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அதன் படி அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு மூன்று ரோந்து கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை பார்த்ததும் அங்கு விரைந்து சென்று அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். 

இதனால், மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர, அவசரமாக எடுத்து கொண்டு கரைக்குத் திரும்பினர். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் கரைகுத் திரும்பினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 700-க்கும் அதிகமான படகுகள் உள்ள ராமேசுவரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு பயந்து குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srilangan navy chase rameshwaram fishermans


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->