"கார் காலம்" கேள்விப்பட்டுள்ளோம்; 'கார் பாலம்' என்பதை இப்போதுதான் பார்க்கிறோம் - தமிழிசை சவுந்தரராஜன்..! - Seithipunal
Seithipunal


நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக பாஜக சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "தமிழக பாஜக சார்பாக மழை காலத்தையொட்டி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம். பாஜக தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கேட்கும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.

தற்போது, சென்னையில் மழையால் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி. அதேசமயம், அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு சதவீதம் நிறைவடைந்துள்ளது? ரூ.4 ஆயிரம் கோடியில் எவ்வளவு சதவீதம் செலவாகி உள்ளது? என்ற தகவல்கள் முழுமையாக இல்லை.

முன்னெச்சரிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என்று கோரிக்கை வைத்தோம். அதன்பிறகு, அபராதம் விதிக்கப்படாது என்றார்கள். ஆனால், தற்போது கார்களை மேம்பாலத்தில் நிறுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறுகிறார்கள். கார் காலம் கேள்விப்பட்டுள்ளோம், 'கார் பாலம்' என்பதை இப்போதுதான் பார்க்கிறோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai soundarrajan speech about chennai rain


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->