குழந்தையின் உயிருக்கு பணம் ஈடாகுமா? - திமுக அரசை வெளுத்து வாங்கிய பாஜக தலைவர்.!
tamilnadu bjp leader annamalai tweet about boy died in tirunelveli hospital
அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவியு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
"திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க. கட்சியில் இருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, தி.மு.க. அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க. கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகி விடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?
தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu bjp leader annamalai tweet about boy died in tirunelveli hospital