தென்காசி: நகம் வெட்ட மாட்டியா? அரசு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!
tenkasi Govt School Student attack police case file against teacher
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஒரு ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, உயிரியல் பாட ஆசிரியராக பணிபுரியும் கருத்தப்பாண்டி என்பவர், மாணவன் ஒருவர் நகம் வெட்டாமல் பள்ளிக்கு வந்ததை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவனை அந்த ஆசிரியர் தாக்கியதாக பெற்றோரால் புகார் எழுந்தது..
இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவனின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் மீது இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
tenkasi Govt School Student attack police case file against teacher