தஞ்சை: காவல் நிலையம் எதிரே கொடூரம்! அண்ணனை காக்க அக்கா, தங்கை செய்த விபரீதம்! ஒருவர் பலி!
Thanjavur Police station Sisters attempt suicide one death
தஞ்சாவூர்: நடுக்காவிரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை விடுவிக்கக் கோரி அவரது தங்கைகள் கீர்த்திகா (29) மற்றும் மேனகா (31) ஆகியோர், காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்றனர்.
இருவரும் தற்கொலைக்கு முயன்று விஷம் அருந்திய நிலையில், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது அக்கா மேனகா தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்திலும் காவல்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் நடவடிக்கையால் இளைய தங்கை உயிரிழக்க நேர்ந்ததால், மக்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களிலும் கண்டனம் எழுந்து வருகிறது.
தினேஷை போலீசார் எந்த காரணத்திற்காக அழைத்துச் சென்றனர்? அவரிடம் எப்படி விசாரணை நடந்தது? தங்கைகள் எந்த மன அழுத்தத்தில் இப்படியான முடிவை எடுத்தனர்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்ட உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கீர்த்திகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், மேனகாவிடம் மேலதிக விசாரணை நடத்தப்படுகிறது.
English Summary
Thanjavur Police station Sisters attempt suicide one death