பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய தம்பதி! வலைவீசி தேடி வரும் போலிசார்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்த நபர் ஜோதி கிளி. இவரது மனைவி இசக்கிராணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளது. தருவையில் உள்ள  இவர்களது மகன்  5-ம் வகுப்பு படித்து கொண்டு வருகிறான்.

அரசு பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கும் பள்ளியில் படிக்கும் மற்றொரு சக மாணவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் இருவரும் மாறிமாறி அடித்துக்கொண்டனர்.

இந்நிலையில் ஜோதிகிளியின் மகன், சக மாணவர் என்னை அடித்ததாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு கோபமடைந்த தந்தை ஜோதி கிளி தனது மகனை அடித்த சக மாணவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இவரைத்தொடர்ந்து ஜோதி கிளியின் மனைவி இசக்கிராணியும் அந்த மாணவனை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மாணவன் நெல்லை அரசு மருதுவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறான்.

அந்த ஊர் பெரியவர்கள் இந்த சம்பவம் குறித்து பேசி இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையில், தம்பதியினர் மாணவனை தாக்கும்  காட்சிகள் அந்த பகுதியில் சில பேர்  வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து வைரலாக பரவியுள்ளது.

இதனை தொடர்ந்து,  காயம் அடைந்த மாணவனின் தாயார் முன்னீர்பள்ளம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மனு பெற்று மாணவனை தாக்கிய தம்பதி ஆகியோர் மீது மாணவனையும், அவனது தாயாரையும் தவறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மாணவனை தாக்கியதாகவும் கூறி இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323, 506 (2), பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஜோதி கிளியின் மனைவி இசக்கி ராணியை போலிசார் கைது செய்தனர். பின்னர் தலைமுறைவான ஜோதி கிளியை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The couple attacked the school student The police are looking for the Internet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->