மதுரை.! நடத்தை சந்தேகத்தில் மனைவியை அடித்து கொன்ற கணவர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் அடித்து கொன்றுள்ளார்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி முருகம்பாள்(40). இவர்கள் இருவரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

ஆனால் கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் இன்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கம்பியால் சரமாரியாக அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த முருகம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மனைவியை கொன்று விட்டதாக கூறி கிருஷ்ணன் சரணடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகம்பாளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The husband who killed his wife in Madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->