செங்கல்பட்டில் பரபரப்பு.! அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி.! சொத்துத்தகராறில் விபரீதம்..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் சொத்து தகராறில் அண்ணனை தம்பி சுட்டுக்கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது தம்பி சந்திரன். இந்நிலையில் அண்ணன்-தம்பியிடையே சொத்துத்தகராறு இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் இது தொடர்பாக இன்று அதிகாலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தம்பி சந்திரன், அண்ணன் வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சொத்துத்தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The younger brother arrested for shot dead his elder brother in chengalpattu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->