கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக ரூ.41 லட்சம் மோசடி: திருவண்ணாமலை வாலிபர் புகார் - Seithipunal
Seithipunal


சென்னை: கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக 53 பேரிடமிருந்து ரூ.41 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முஹமது அலி (29) என்பவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

முஹமது அலி தனது புகார் மனுவில் கூறியதாவது: "நான் டிப்ளமோ ஹார்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். குடும்ப சூழ்நிலையால் வெளிநாட்டில் வேலை செய்ய தீர்மானித்தேன். எனது தம்பியின் மூலம் கனடாவில் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுவதாக கூறிய யாஸ்மின் பின்தீ என்பவரை சந்தித்தேன். அவர், கனடாவில் ரெஸ்டாரெண்ட் மற்றும் சூப்பர் மார்க்கெட் தொடங்க உள்ளதாகவும், அதற்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் கூறினார்.

விசா பெற ரூ.2 லட்சம் தேவையென கூறிய அவர், முதற்கட்டமாக எனது வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் பணம் செலுத்தச் சொன்னார். அத்துடன், மேலும் 53 பேர் பணியமர்த்தப் படுவதாக உறுதி அளித்தார். நான் அவர்களிடமிருந்து ரூ.41 லட்சத்துக்கும் மேலான தொகையை வசூலித்து யாஸ்மின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வழங்கினேன். ஆனால், எந்த வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பித் தர மறுக்கின்றனர். கேள்வி எழுப்பியதற்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன."

முஹமது அலி, யாஸ்மின் பின்தீ மற்றும் அவரது கூட்டாளிகள் முகமது ஹரிஷ், ஆரோக்கியராஜ் ஆகியோருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தனது மனுவில் கோரியுள்ளார்.

முகமது அலி அளித்த புகார் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.-க்கு விசாரணை நடத்துமாறு டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மோசடி சம்பவம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai teenager complains of Rs 41 lakh scam of getting a job in Canada


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->