கஞ்சா விற்பனை - நெல்லையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, தேவர்குளம் அருகே சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆசைதம்பி மகன் கண்ணன். இவரும், மேல தாழையூத்து, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிதுரை என்பவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இவர்கள் 2 பேர் மீதும் மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோன்று ராதாபுரம், வடக்கு வள்ளியூரை சேர்ந்த கண்ணன் மகன் சித்ரவேல்பாண்டி என்பவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதும் பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த கோரிக்கையின் படி, மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டார். அதன் படி மேற்சொன்ன 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples arrested kuntas in tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->