நேருக்கு நேர் மோதிய 2 லாரிகள் - 3 பேர் பலி; 4 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அத்துமரத்துப்பள்ளம் பகுதியில் சென்றபோது, ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி வந்த லாரி நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples died and four peoples injured for accident in krishnagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->