மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி.! பின்னணியில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி, நாங்குநேரி அருகே உள்ள மருத குலத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கரசுப்பு (வயது 33) இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். 

இவர் தனது சொத்து பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் மன உளைச்சல் அடைந்த சங்கரசுப்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளித்தார். 

இதனை பார்த்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து சங்கர சுப்புவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli collector office front Farmer attempted suicide 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->