தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையா? தமிழக ஆளுநர் மாளிகை கடும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


"பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக பரவும் தகவலை நம்ப வேண்டாம்" என்று ஆளுநர் மாளிகை சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், பீகார் மாநில நபரின் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக பரவும் தகவல் பொய்யானது.

சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்று ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

மேலும் தனி நபருக்கு எதிரான எந்த தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் தமிழக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என்ற ஒரு விளக்கத்தையும் தெரிவித்துள்ளது.

இப்படியான பொய்யான, தவறான தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் ஆளுநர் மாளிகை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தவறான, பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Governor warn about fake news


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->