தேர்வு நடத்தும் அதிகாரி மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பொது தேர்வு நடத்த புதிய இணை இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை மூலம் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு தேர்வு துறையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடத்தும் பொறுப்பு இணை இயக்குனர் குமாரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவர் கள்ளர் சீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இணை இயக்குனராக மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த இணை இயக்குனர் செல்வராஜ் அரசு தேர்வுகள் துறையின் மேல்நிலை வகுப்புகளுக்கான தேர்வு நடத்தும் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அரையாண்டு பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு நடத்தும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN School Education Dept changed exam conducting officer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->