நெல்லை || கல்லூரி மாணவர்களிடையே மோதல் - 2 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் அரசு ஐ.டி.ஐ. ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஐ.டி.ஐயில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், நெல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் படித்து வருகிறார்கள். 

இந்த மாணவர்கள் இடையே கடந்த 21-ந் தேதி நெல்லை சந்திப்பில் தகராறு ஏற்பட்டதனால் அவர்களுக்குள் முன்விரோதம் உருவானது. இதையடுத்து நேற்றும் ஐ.டி.ஐ.க்கு எதிரே உள்ள பேட்டை ரெயில் நிலையத்திற்கு இருதரப்பு மாணவர்கள் வந்தனர். 

அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கற்கள் மற்றும் பெல்ட்டால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்களுக்கு மண்டை உடைந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி விரைந்து வந்த ரெயில்வே போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே போலீசார் சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two college students injured for clash in tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->