கிருஷ்ணகிரியில் பயங்கரம் - காதலிக்கு தொந்தரவு கொடுத்த முன்னாள் காதலன் கொலை.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை வேன் ஓட்டுநர் கார்த்திக் என்பவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தினேஷ் மற்றும் அவரது காதலி புவனேஸ்வரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தினேஷ்குமார் தனது காதலிக்கு தொந்தரவு கொடுத்ததால் கார்த்திக்கை கொன்றேன் என்று வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

அதாவது, புவனேஸ்வரி கார்த்திக்குடனான காதலை முறித்து கொண்டு தினேஷ்குமாரை காதலித்து வந்த நிலையில் மீண்டும் கார்த்திக் தொந்தரவு செய்ததால் அவரை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொலை செய்த பின்னர் கார்த்திக் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து மகராஜகடை பகுதியில் வீசி சென்றது தெரிய வந்தது.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for murder case in krishnagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->